0

பெண்கள் மனது புண்பட்டிருந்தால் என் கண்ணீர் கொண்டு துடைப்பேன் - டி.ஆர் - Cineulagam

பீப் பாடல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி டி.ஆர். ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்த பாடல் சம்பந்தப்பட்ட சிம்பு எந்த படத்திலோ, ஆல்பமாகவோ, எப்.எம்.ரேடியோவிலோ பாடவில்லை. இது ஒரு முழுமை பெறாத பாடல். அந்தப் பாடல் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பாடல்.

இந்த பாடலை வேண்டத்தகாத விஷக்கிருமிகள் சிலர் திருடி எடுத்துச் சென்று, சிம்புவின் மேல் பெண்கள் மத்தியில் ஒரு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும், ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

இந்த பாடல் பெண்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால், நான் அதற்காக வருத்தப்படுகிறேன். மனது உருகுகிறேன். என்னுடைய கண்ணீரால் அந்த களங்கத்தை உங்கள் மனதில் இருந்து துடைக்க விரும்புகிறேன்.

Post a Comment

 
Top